Now Reading
நடிகையுடன் நாகசைதன்யா டேட்டிங் – சமந்தா கொந்தளிப்பு

நடிகையுடன் நாகசைதன்யா டேட்டிங் – சமந்தா கொந்தளிப்பு

நடிகை சமந்தா  மற்றும் நாகசைதன்யா திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்து சுமார் ஓராண்டுக்களுக்கு மேல் ஆனாலும், அவர்களைப் பற்றிய வதந்திகளுக்கு இன்னும் முடிவு வந்ததாக தெரியவில்லை. காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும், தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட மனக்கசப்பு காரணமாக மனம் உவந்து பிரிவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமந்தாவும், நாகசைதன்யாவும் அவரவர் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பிஸியாக  பல மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் அண்மையில் வெளியானது. நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தாவைச் சுற்றி வதந்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, அவரது முன்னாள் கணவரான நாகசைதன்யாவுடன் இணைத்து வதந்திகள் பரப்பப்படுகின்றன

அதாவது நாகசைதன்யா தற்போது மாடல் அழகியும் நடிகையுமான ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நாகசைதன்யா மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சமந்தாவின் பி.ஆர் டீம், தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)