சந்திரமுகி பற்றி ஓபனாக சொன்ன ரஜினி

ரஜினிகாந்த் இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வெற்றியையும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியையும் சந்தித்தன. தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் சந்திரமுகி பற்றி ரஜினி ஓபனாக சொன்ன விஷயம் தெரியவந்திருக்கிறது.
பெங்களூருவில் பேருந்து நடத்துநராக இருந்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி நிற்கிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கு முன்னதாக நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.
தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. கூலி: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, ‘மீசை வைத்த குழந்தையப்பா’ என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது.
இதற்கிடையே ரஜினிகாந்த் கரியரில் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றுதான் சந்திரமுகி. அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடித்த பாபா படம் படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே படம் கிட்டத்தட்ட 800 நாட்கள் ஓடியது. இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின்போது நடந்த விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. என்ன நடந்தது?: அதாவது சந்திரமுகி படம் முழுதாக ரெடியான பிறகு அந்தப் படத்தை பார்த்தாராம் ரஜினிகாந்த். படத்தை பார்த்த அவர், பி.வாசுவையும், நடிகரும் அந்தப் படத்தின் தயாரிப்பாளருமான பிரபுவையும் அழைத்து, ‘படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே திருப்தியாக இருக்கிறது. ஆனால் முதல் மூன்று நாட்கள் படத்துக்கு ஓபனிங் இருக்காது. அதற்கு பிறகு படம் மெகா ஹிட்டாகும்’ என்று கூறினாராம். அவர் சொன்னபடியே சந்திரமுகி படம் மூன்று நாட்கள் கழித்துதான் பெரிய அளவில் ஹிட்டாக ஆரம்பித்ததாம். இதனை பி.வாசு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)