Now Reading
பானுப்பிரியாவின் நிலை; பார்க்கவே கஷ்டமா இருந்தது – வேதனை தெரிவித்த பிரபலம்

பானுப்பிரியாவின் நிலை; பார்க்கவே கஷ்டமா இருந்தது – வேதனை தெரிவித்த பிரபலம்

1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. மேலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா என்கிற மகளும் உள்ளார். கடைசியாக தமிழில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பானுப்பிரியா குறித்து குட்டி பத்மினி பேசியுள்ள வீடியோ ஒன்றில், அவர் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாக செய்தி வந்தது. அதன் பிறகு, பானுப்பிரியாவிற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவரின் கணவர் உயிரோடு தான் இருக்கிறாரா இல்லை என்பதுகூட யாருக்கும் தெரியவில்லை.

இதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் பானுவை சந்தித்தேன். அப்போது, பானுப்பிரியாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். முகத்தில் ஒரு கவலை, சோகம் என வெறுமையாக இருந்தார்.

See Also

இப்படி பானுப்பிரியாவை பார்க்க எனக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது, இந்த குழந்தைக்காகத்தான் வாழ்கிறேன் என்று சொன்னதை கேட்டு நான் உடைந்து போனேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)