Now Reading
விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய சமந்தா!

விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய சமந்தா!

சென்னையைச் சேர்ந்த சமந்தா தமிழில் அறிமுகமாகி தெலுங்கிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்த அவர் திருமணம் செய்துகொண்டார். சிறப்பாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. இருவரும் தங்களுக்கு பரஸ்பரமாக பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் இருவரது ரசிகர்களுமே அதிர்ச்சியடைந்தனர். மேலும் விவாகரத்தால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை பாதாளத்திற்கு செல்லும் என பலர் கூறினர்.

ஆனால், திருமண பந்த முறிவுக்கு பிறகு சமந்தாவின் கிராஃப் உச்சம் சென்று கொண்டிருக்கிறது. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த அவர் புஷ்பா படத்தில் பாடல் ஒன்றுக்கும் நடனமாடினார். அவரது நடனத்தாலேயே உம் சொல்றியா மாமா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

இதற்கிடையே அவர் தி ஃபேமிலி மேன் சீரிஸிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படி தமிழ், தெலுங்கு, பாலிவுட் என ரவுண்ட் கட்டி அடிக்கும் சமந்தா அடுத்ததாக ஹாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

See Also

இந்நிலையில், அக்‌ஷய் குமாருடன் சமந்தா காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்திய அளவில் பலரை ரசிகர்களாக பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களிடம் கரண் ஏகப்பட்ட கேள்விகளை கேட்பார். அதற்கு அவர்களும் வெளிப்படையாகவே பதில் சொல்வார்கள்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)